Skip to content
Periya Puranam

பன்னிரண்டாம் திருமுறை – பெரிய புராணம்

7.06 கூற்றுவ நாயனார் புராணம்

சேக்கிழார்

3930

துன்னார் முளைகள் தோள் வலியால் வென்று சூலப் படையார் தம் நன்னாமம் தம் திரு நாவில் நாளும் நவிலும் நலம் மிக்கார் பன்னாள் ஈசர் அடியார்தம் பாதம் பரவி பணிந்து ஏத்தி முன்னாகிய நல் திருத் தொண்டின் முயன்றார் கனந்தை முதல்வனார்

3931

அருளின் வலியால் அரசு ஒதுங்க அவனி எல்லாம் அடிப் படுப்பார் பொருளின் முடிவும் காண்பரிய வகையால் பொலிவித்து இகல் சிறக்க மருளும் களிறு பாய் புரவி மணித்தேர் படைஞர் முதல் மாற்றார் வெருளும் கருவி நான்கு நிறை வீரச் செருக்கின் மேலார்

3932

வென்றி வினையின் மீக்கூர வேந்தர் முனைகள் பல முருக்கிச் சென்று தும்பைத் துறை முடித்தும் செருவில் வாகைத் திறம் கெழுமி மன்றல் மாலை மிலைந்தவர் தம் வள நாடு எல்லாம் கவர்ந்து முடி ஒன்றும் ஒழிய அரசர் திரு எல்லாம் உடையர் ஆனார்

3933

மல்லல் ஞாலம் புரக்கின்றார் மணி மா மவுலி புனைவதற்குத் தில்லை வாழ் அந்தணர் தம்மை வேண்ட அவரும் செம்பியர் தம் தொல்லை நீடும் குல முதலோர்க்கு அன்றி சூட்டோ ம் முடி என்று நல்காராகிச் சேரலன் தன் மலை நாடு அணைய நண்ணுவார்

3934

ஒருமை உரிமைத் தில்லை வாழ் அந்தணர்கள் தம்மில் ஒரு குடியைப் பெருமை முடியை அருமை புரி காவல் பேணும் படி இருத்தி இருமை மரபும் தூயவர் தாம் சேரர் நாட்டில் எய்தியபின் வரும் ஐ உறவால் மனம் தளர்ந்து மன்றுள் ஆடும் கழல் பணிவார்

3935

அற்றை நாளில் இரவின் கண் அடியேன் தனக்கு முடியாகப் பெற்ற பேறு மலர் பாதம் பெறவே வேண்டும் எனப் பரவும் பற்று விடாது துயில் வோர்க்குக் கனவில் பாத மலர் அளிக்க உற்ற அருளால் அவை தாங்கி உலகம் எல்லாம் தனிப் புரந்தார்

3936

அம் பொன் நீடும் அம்பலத்துள் ஆரா அமுதத் திரு நடம் செய் தம்பிரானார் புவியில் மகிழ கோயில் எல்லாம் தனித் தனியே இம்பர் ஞாலம் களி கூர எய்தும் பெரும் பூசனை இயற்றி உம்பர் மகிழ அரசு அளித்தே உமையாள் கணவன் அடிசேர்ந்தார்

3937

காதல் பெருமைத் தொண்டின் நிலைக் கடல் சூழ் வையம் காத்து அளித்துக் கோதங்ககல முயல் களந்தைக் கூற்றனார் தம் கழல் வணங்கி நாத மறை தந்து அளித்தாரை நடைநூல் பாவில் நவின்று ஏத்தும் போதம் மருவிப் பொய் அடிமை இல்லாப் புலவர் செயல் புகல்வாம்

3938

சுந்தர மூர்த்தி சுவாமிகள் துதி தேனும் குழலும் பிழைத்த திரு மொழியாள் புலவி தீர்க்க மதி தானும் பணியும் பகை தீர்க்கும் சடையார் தூது தரும் திருநாள் கூனும் குருடும் தீர்த்து ஏவல் கொள்வார் குலவு மலர்ப் பாதம் யானும் பரவித் தீர்க்கின்றேன் ஏழு பிறப்பின் முடங்குகூன்