Skip to content
Thevaram

நான்காம் திருமுறை – திருநாவுக்கரசு பதிகம்

4.46 திருவொற்றியூர் - திருநேரிசை

திருநாவுக்கரசர்

4.46

திருவொற்றியூர் - திருநேரிசை

454

ஓம்பினேன் கூட்டை வாளா உள்ளத்தோர் கொடுமை வைத்துக் காம்பிலா மூழை போலக் கருதிற்றே முகக்க மாட்டேன் பாம்பின்வாய்த் தேரை போலப் பலபல நினைக்கின் றேனை ஓம்பிநீ உய்யக் கொள்ளாய் ஒற்றியூ ருடைய கோவே.

455

மனமெனுந் தோணி பற்றி மதியெனுங் கோலை யூன்றிச் சினமெனுஞ் சரக்கை யேற்றிச் செறிகட லோடும் போது மதனெனும் பாறை தாக்கி மறியும்போ தறிய வொண்ணா துனையுனும் உணர்வை நல்காய் ஒற்றியூ ருடய கோவே. இப்பதிகத்தில் ஏனைய செய்யுட்கள் சிதைவுற்றன.