Skip to content
Periya Puranam

பன்னிரண்டாம் திருமுறை – பெரிய புராணம்

11.02 பரமனையே பாடுவார் புராணம்

சேக்கிழார்

4155

புரம் மூன்றும் செற்றானைப் பூணாகம் அணிந்தானை உரனில் வரும் ஒரு பொருளை உலகு அனைத்தும் ஆனானைக் கரணங்கள் காணாமல் கண் ஆர்ந்து நிறைந்தானை பரமனையே பாடுவார் தம் பெருமை பாடுவாம்

4156

தென் தமிழும் வட கலையும் தேசிகமும் பேசுவன மன்றின் இடை நடம் புரியும் வள்ளலையே பொருள் ஆக ஒன்றிய மெய் உணர் வோடும் உள் உருகிப் பாடுவார் பன்றியுடன் புட்காணாப் பரமனையே பாடுவார்